Wednesday 9 January 2013

தமிழ் மேல் எனக்கு உள்ள கோபம்

கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம்!
தமிழ் மேல் எனக்கு மிகுந்த கோபம் உள்ளது ....
தமிழ் என்னதான் பழமை வாய்ந்த மொழி திராவிட மொழிகளின் தாய் என்று இருந்தாலும் ஏன் உலக மொழிகளின் தாய் தமிழ் என்று பாவாணர் போன்றவர்களும் நிறைய தமிழ் அறிஞர்களும் சில மேலைநாட்டு அறிஞர் கூறியிருந்தாலும் (யார் இவ்வாறு கூறியது பற்றி நான் இணையத்தில் படித்திருக்கிறேன் சரியாக அவர்களின் பெயர்களும் அந்த வலைப்பூவின் பெயர்களும் ஞாபகம் இல்லை அதனால் என்னை மன்னியுங்கள் ஞாபகம் வந்தாலோ அல்லது இச்செய்தியை பற்றி வேறு எங்காவது கண்டாலோ அதை கண்டிப்பாக பதிவிடுகிறேன்  ) தமிழை தமிழர்கள் அவ்வளவாக நேசிப்பதில்லை என்பதே உண்மை இதை எதிர்த்து வாதம் வேண்டுமானால் செய்யலாம் அனால் உண்மை நிலை இதுவே ...ஒரு சின்ன உதாரணம்
என் நண்பர்அவர் பெயரை இங்கு குறிப்பிடுவேன் அனால் இப்பதிவை அவர் கண்டிப்பாக படிப்பார் அவ்வாறு அவர் படித்தால் அவர் மனம் புண்படும் என்பதால் அவர் பெயரை கூறவில்லை ,அவருடன் ஒரு முறை நான் முகநூலில் அந்த நண்பரிடம் chat செய்து கொண்டிருந்தேன் அதுவும் தமிழில் என்னை சும்மா விடுவாரா அவர் உடனே "டாய் தமிழிய்யா டா வேணாம் டா என்னால தாங்க முடியாது இங்கிலீஷ்லையே chat பண்ணு" என்றான் நான் அவ்வாறு தமிழில் chat செய்ததற்கான காரணம் அப்பொழுது நமது வலைப்பூவில் ஒரு பதிவு எழுதிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது அவன் முகநூலில் ஆன்லைனில் வரவே தெறியாமல் தமிழில் chat செய்து விட்டேன் என்று கூறியவுடன் தான் சாந்தமடைந்தான் இத்துணைக்கும் நாங்கள் ஆங்கிலத்திலையும் chat செய்யவில்லை தங்க்லீஷ்(enna panra=என்ன பண்ற )முறையில் தான் அவனும் தமிழனே நானும் தமிழனே பிறகு எதற்கு இந்த தாழ்வு  மனப்பான்மை ...தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நாம் எழுதிக்கொள்ள தான் லாயக்கு என்று புரிந்துகொண்டேன் இது மாதிரி என் நண்பர்கள் கூறுவது முதல்முறை இல்லை பல முறை வேறு சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது ...அதை எல்லாவற்றையும் இங்கே குறிப்பிட்டால் இப்பதிவு மிக பெரியதாகி தாங்கள் படிப்பதற்கே எரிச்சலாகிவிடும் ....

இந்தியாவின் தொன்மையான மொழிகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதும்  என்று கூறப்படுகிறது (சமஸ்கிருதும் என்பது தொன்மையான மொழியே அல்ல என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை ஏன் மொஹென்ஜோதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகம் கூட தமிழ் நாகரீகம் என்பதே இதற்கு ஒரு சிறிய சான்று  )

சமஸ்கிருதத்தில் இருந்து உருவான ஹிந்தி மற்றும் இதர பல வடஇந்திய மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் அதை பெருமையாக நினைக்கிறார்கள் ஏன் தமிழிலிருந்து உருவான தென்னிந்தியா மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் கூட அதை நினைத்து பெருமை படுகிறார்கள் எங்கும் அவற்றையே பயன்படுத்துகிறார்கள் சிலர் தெலுங்கு தமிழில் இருந்து உருவாகவில்லை சமஸ்கிருதத்தில் இருந்து உருவாகியது என்று மடமையில் பெசுவார்களும் உண்டு அதை பற்றி பிறகு எதாவது ஒரு பதிவில் கண்டிப்பாக விவாதிக்கலாம் .....அனால் நாமோ வெறுமையாக பெருமை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் .....

பெரும்பாலும் அணைத்து வலைபதிவர்களும் ஏதாவது ஒருவகையில் தமிழில் திட்டு அல்லது கேளிக்கைக்கு கண்டிப்பாக ஆளாயிருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் ...இருந்தாலும் அதை பற்றி நான் அவ்வளவாக பெரிதாக எடுதுக்கொல்வதில்லை இருந்தபோதிலும் அவர்களை திட்டி விட்டு தான் அடுத்த வேலையை பார்த்திருக்கிறேன் ......

தமிழர்களாகிய நாம் முதலில் தமிழில் பெயர் வைக்கிறோமா என்றால் அதுவும் கிடையாது சிலர் வாடா சொல் பெயர்களை கூட தமிழ் பெயர்கள் என்று நினைப்பவரும் நம்முள் நிறைய உண்டு ...

ஏன் என் பெயர்கூட தமிழ் பெயரா என்பது சந்தேகமே சில தமிழ் பெயர்கள் வடமொழிக்கு சென்று வழங்கப்பட்டிருப்பதும் நடக்க தான் செய்திருக்கிறது அது வேறு விஷயம் ...

மதம் என்ற பெயரிலும் நாகரீகம் என்ற பெயரிலும் நாம் அனைவரும் தமிழ் பெயர்களை வைக்காமல் வேற்று மொழி பெயர்களையே வைக்கிறோம் ...
நமது நாட்டில் இருக்கும் முக்கியமான மதங்கள் கிருத்துவம்,இஸ்லாம்  மற்றும் இந்து ....

கிருத்துவம் :
கிருத்துவம் மேலைநாட்டினரின் அறிஞர் மற்றும் அவர்களின் வருகையாலும் படைஎடுப்புகளாலும் நம் நாட்டில் பரவியது ....நம் தமிழ்நாட்டில் ஒருவர் கிருத்துவ மதத்திற்கு மாறினால் பெரும்பாலும் அவர்கள் ஆங்கில பெயர்களான ஜார்ஜ் ,ஜோசப்,பீட்டர்  போன்ற பெயர்களை வைத்து கொள்கின்றனர் மதம் மாறுவார்கள் மட்டுமல்ல ஏற்கனவே கிறித்துவராக இருப்பவர்களும் இவ்வாறான  பெயரகளையே வைத்துகொள்கிறார்கள் ...
இருந்தாலும் அனைவருமே  இதுபோன்று தான் பெயர் வைகிறார்கள் என்று நான் கூறவில்லை இது போன்று அவர்கள் வைக்காமல் தமிழ் பெயர்களை வைப்பவர்களும் நிறைய பேர் உண்டு பெரும்பாலும் இப்பொழுதுதான் இதுபோன்ற ஆங்கில பெயர்கள் அதிகமாக சூட்டப்படுகின்றன ...

இஸ்லாம் :

கிருத்துவம் போலவே இஸ்லாமிய மன்னர்களின் மூலமாகவும் அம்மதத்தின் போதகர்களாலும் நம் நாட்டில் பரவியது ....நம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய முழுவதும் இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியில் உள்ள பெயர்களையே அவர்கள் சூட்டிக்கொள்கின்றனர் ....எடுத்துக்காட்டாக இனாயத் கான் ,அஹ்மத்  இன்னும் நிறைய எனக்கு சரியாக அப்பெயர்கள் ஞாபகள் இல்லை .......இவ்வாறு அரபு பெயர்களை தான் அவர்கள் வைக்கவேண்டுமென்று அவர்களின் புனித நூலான குரான் கூறுகிறதா என்று எனக்கு தெரியவில்லை ...ஆனால் அவ்வாறு கூற பட்டிருக்காது என்பது என் நம்பிக்கை ....இதை இணையத்தில் உள்ள இஸ்லாமிய தோழர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும் ...எனக்கு தெரிந்து எந்த மதமும் பெயரை வைப்பதற்கு கூட கட்டாயம் விதிக்காது என நினைக்கிறேன் .....இஸ்லாமில் தற்காலத்தில் மதம் மாறியவர்களும் இவ்வாறான பெயர்களைத்தான்  வைத்துகொள்கிறார்கள் ஏன் நமது ஏ.ஆர் .ரகுமானே மதம் மாறுவதற்கு முன்னர்  திலீப் குமார் (இதுவும்  தமிழ் பெயரில்லை ) என்று இருந்தார் மதம் மாறிய பின்னர் அரபு பெயரை வைத்துள்ளார் ....

இந்து :

 தமிழ்நாட்டில்  பெரும்பாலும் அணைத்து இந்துக்களின் பெயர்களும் வடமொழியின் பெய்ரகளாகவே உள்ளது ..இதற்கு எடுத்துகாட்டுகள் கூற தேவையில்லை என நினைக்கிறேன் ....
இந்துவாக மதம் மாறியவர்களும் இது போலவே தான் தமிழில் அல்லாமல் வேற்று மொழி பெய்ரகளையே வைக்கிறார்கள் ...பெரும்பாலும் பேஷன் என்ற ஒன்றை தவிர இந்து மதத்தில் வேற்று மொழியின் பெயரை வைப்பதற்கான காரணம் ஏதும் கிடையாது ....சிலர் ஜாதகம் என்ற பெயரிலும் இத்தவற்றை செய்கிறார்கள் ......

இம்மொன்று முக்கியமான மதத்தினரும் தங்கள் தாய்மொழியாகிய தமிழில் எப்பொழுது பெயர்களை வைப்பார்கள் என்று  தெரியவில்லை ..
..............................................................................................................................................................
ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை என்று கேட்டால் தமிழில் நல்ல பேஷன் ஆன பெயர்கள் இல்லை சொல்வதற்கு இலகுவாக இல்லை என்று பதில் வேறு .....
தமிழில் நல்ல அருமையான அனைவரும் சொல்வது போல் பேஷன் ஆன பெயர்களும் இருக்கத்தானே செய்கிறது அதை கண்டுபிடித்து அல்லது தேடி வைக்கலாமே நாம் தான் மதம் ,பேஷன் ,ஜாதகம்  இன்னும் பிறவற்றால் நம் தாய் மொழி சிறப்பை இழித்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள் ....
இப்பதிவு வேறு மாதிரி எழுதலாம் என்று நினைத்திருந்தேன் வேறு எங்கோ சென்றுவிட்டது போல் எனக்கு தோன்றுகிறது பரவாயில்லை இது கூட ஒருவேளை பயனுள்ளதாக இருக்கலாம் ....
சரி இனி நாமாவது இனி வரும் தலைமுறைகளுக்கு பெயரையாவது தமிழில் வைக்கலாம் .....

இப்பதிவு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும் ....
பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களிடம் பகிருங்கள் ..
நன்றி ....





7 கருத்துக்கள்:

  1. அருமையான பதிவு.

    தமிழின் அருமையை தமிழர்கள் நாம் பலர் உணர்வதில்லை.
    இனியாவது உணர்ந்து செயல்படுவோம்.

    ஓர் இனத்தின் அடையாளமே அந்த இனத்தின் மொழிதான்.
    தமிழ் அழிந்து போனால் நம்மை எப்படி அடையாளப் படுத்துவது???

    பிற மொழி திணிப்பை எதிர்ப்போம். தாய்த்தமிழ் காப்போம்.

    http://rsgurunathan.blogspot.in/2012/12/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ...மேலும் தாங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன் அருமை ..

      Delete
  2. தாய் மொழியைப் போற்றி எழுதியிருக்கிறீர்கள். பிறர் மனம் புண்பட ஒன்றுமில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

    இனியும் எழுதுங்கள். அது நம் தமிழ் காக்க உதவும்.

    பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி .....

      Delete
  3. நாம் தான் நம் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நம் முன்னோர்களுக்கு அந்த கவலை கிடையாது., தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதிப்பு நம்மைத் தாண்டி நம் அடுத்தத் தலைமுறையைத்தான் சென்றடையும்.... நல்ல பதிவு வாழ்த்துகளுடன் சிங்கமணி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்கமணி தோழரே ....நம்மை போன்று அனைத்து தமிழர்களும் இவ்வாறு யோசித்தால் விரைவில் நம் எதிர்பார்ப்பு நிறைவேறும் ..

      Delete
  4. நல்ல பதிவு...............
    குறைகளைச் சுட்டுவதே வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இதனைக் கூற விழைகிறேன்....
    உங்கள் பதிவுகளில் எழுத்துப் பிழைகளைச் சற்று குறைத்தால் சிறப்பாய் இருக்குமென்று கருதுகிறேன்....
    (மேதாவிதனத்தை நிரூபிக்க கூறுவதாக நினைக்க வேண்டா!)

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!